கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் டிசம்பர் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரச மற்றும் தனியார் துறை கூட்டு அபிவிருத்தி முயற்சியாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கையின் பிரதான பங்காளராக இந்தியாவின் அதானி நிறுவனம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 5 ஆயிரம் கோடி இந்திய ரூபா பெறுமதியில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!