இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கும் தொற்று!

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.இதையடுத்து இராஜாங்க மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இம்மாதத்தில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 ஆவது பாராளுமன்ற உறுப்பினர் இவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!