அமெரிக்கா விலகினாலும் அனைத்துலக ஈடுபாடு மாறாது – ஐ.நா பிரதிநிதி உறுதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று உறுதியளித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள சூழல் குறித்து, இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது,

இதன்போது, கருத்து வெளியிட்ட ஐ.நா பிரதிநிதி, ரெரன்ஸ் டி ஜோன்ஸ்,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும், 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அனைத்துலக ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!