தமிழகத்தை உலுக்கிய சம்பவம்: சொந்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை! October 5, 2021 7:57 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழக மாவட்டம் சேலத்தில் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த மகனை தந்தையே விஷ ஊசி போட்டு கொன்றதாக வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சி குடைக்காரன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 14 வயதில் வண்ணத்தமிழ் எனும் மகன் உள்ளார்.வண்ணத்தமிழுக்கு சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தினால் கடந்த ஓராண்டாக எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் கேன்சர் நோய் வந்து பெரும் அவதிக்குள்ளாகிய வண்ணத்தமிழ், வீட்டில் தூங்கமுடியாமல் கூச்சலிட்டுக் கொண்டே வந்துள்ளார்.பெற்ற மகன் துன்பப்படுவதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத அவரது தந்தை பெரியசாமி தனது உறவினர் பிரபு என்பவரை வழவழைத்து விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.இந்த தகவலை அறிந்த கொங்கணாபுரம் பொலிஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சிறுவன் வண்ணத்தமிழுக்கு விஷ ஊசி தான் போடப்பட்டதா? அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தந்தையே மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…