எரிவாயு விலை உயர்வை தவிர்க்க முடியாது!

உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

உலக சந்தை விலை உயர்வால் எரிவாயு விலையை திருத்த வேண்டிய கட்டாயம் அரசங்கத்துக்கு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு தற்போது 800 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது எதிர்காலத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!