இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி October 7, 2021 7:37 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் வழங்குவதற்கு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். அதற்கான உரிய தொழில்நுட்ப குழுவினர் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் சுகாதார சேவை உட்பட முன் வரிசை ஊழியர்களுக்காக பூஸ்டர் தடுப்பூசியான பைஸர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இந்த இலக்கை எட்டியவுடன் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதிற்கு குறைவானவர்களுக்கும் அதன் பின்னர் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எனினும் அதற்கான உரிய காலப்பகுதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஒரு நபர் தனது இரண்டாவது தடுப்பூசி பெற்று 6 மாதங்களின் பின்னரே பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…