திடீரென மாயமான 65 இலங்கை தமிழர்கள்: கனடா தப்பிச்சென்றார்களா? – கியூ பிரிவு போலீசார் விசாரணை!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த 65 பேரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இது பற்றி கியூ பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

இதில் இலங்கை அகதிகள் 65 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஏறி தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் கனடா நாட்டுக்கு செல்லும் நோக்கத்துடன் படகில் தப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய முழு தகவல்களையும் கியூ பிரிவு போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதற்காக சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியும் நாடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!