முருங்கையில் இருந்து மருந்துப் பொருட்களை தயாரிக்க கியூபா உதவும்!

முருங்கைக்காயில் இருந்து மருத்துவப் பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க கியூபா முன்வந்துள்ளது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்செலோ கோன்சலஸ் கேரிடோ இதைத் தெரிவித்துள்ளார்.

முருங்கை மரத்தில் இருந்து மருத்துவ குளிசைகள் மற்றும் தூளை உற்பத்தி செய்வதாக கியூப தூதுவர் குறிப்பிட்டார். முருங்கை மிகுதியாக வளரும் இலங்கைக்கு இத்தகைய தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என்றார்.

இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே பரிமாற்றங்களை ஊக்குவிப்பது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இலங்கையில் ஸ்பானிய மொழி கற்பிப்பதை ஊக்குவிக்க கியூபாவிடம் அமைச்சர் தினேஷ் குணவர்தன உதவி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!