அமெரிக்க ஒப்பந்த விவகாரம் – மகிந்த உட்பட 54 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு! October 21, 2021 11:10 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவையின் உறுப்பினர்கள், அமெரிக்க நிறுவனத்தினர் என 54 பேரின் பெயர் குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.கெரவலப்பிட்டிய யுளுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் அரசுக்கு இருந்த பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்தமை மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் முடிவை செல்லுப்படியற்றதாக்கி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவையின் உறுப்பினர்கள், அமெரிக்க நிறுவனத்தினர் என 54 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து வழக்கு முடியும் வரை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் இலங்கை அரசுக்குரிய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதார், உயர் நீதிமன்றத்தை கேட்டுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…