விசேட விமானத்தில் வந்திறங்கிய அதானி! – ஜனாதிபதியை சந்திக்கிறார்.

தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார். இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட அதானி குழும நிறுவனத்தின் முதலீடுகள் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!