இரயில்வே திணைக்களத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் – போக்குவரத்து அமைச்சர் October 26, 2021 7:44 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இரயில்வே திணைக்களத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே தமது நோக்கம் என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன், போக்குவரத்து துறையை நவீன மயப்படுத்தி மக்களுக்கு இடையூறின்றி சேவைகளை வழங்குவதன் மூலம் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றமுடியும் அவர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து துறையின் உட்கட்டமைப்பினை மாற்றுவதன் மூலம் ஏனைய பிரிவுகளில் தன்னிச்சையாக மாற்றம் ஏற்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.மேலும் சரக்கு ரயில் சேவையினை கவர்ச்சிகரமாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…