டிசம்பரில் நான்காவது அலை!

டிசம்பரில் இலங்கை நான்காவது கோவிட் அலைக்கு முகம் கொடுக்கக்கூடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே கோவிட் தொற்றுகள் சிறிதளவு அதிகரித்துள்ளதாக உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாது போனால் இலங்கை நான்காவது அலையிலிருந்து தப்பிக்க முடியாது என பேராசிரியர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார்.

டிசம்பரில் உலகம் கோவிட் தொற்றின் நான்காவது அலையை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும், இது தொடர்பாக இலங்கையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நாடு ஒருபோதும் வைரஸால் பாதிக்கப்படாதது போல் பொதுமக்கள் நடந்துகொள்வதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!