ஆயர்களைச் சந்திக்க ஹெலியில் வந்த சுவிஸ் தூதுவர்!

வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று நண்பகல் உலங்குவானுர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்து இறங்கிய சுவிஸ் துதுவர் தலைமையிலான குழுவினர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் ஆயர் இம்மனுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, திருகோணமலை ஆயர் நோயல் இம்மனுவேல் ஆண்டகை ஆகியோரை சந்தித்து சமகால நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!