வரவுசெலவுத் திட்டத்தை இன்று சமர்ப்பிக்கிறார் பசில்!

2022ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால், இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வரவு-செலவுத்திட்ட யோசனைகளை முன்வைத்தல் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகும்.

நாளை முதல் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு நாள்கள் வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். நவம்பர் 22ஆம் திகதி பி.ப 05.00 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நவம்பர் 23ஆம் திகதி முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசெம்பர் 10ஆம் திகதி வரை 16 நாள்கள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!