பிரெஞ்சு போலீசார் தாக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளியின் வீட்டை சோதனையிட்டபோது கிடைத்த ஒரு பொருள் – காத்திருந்த பேரதிர்ச்சி!

பிரான்சில் பொலிசார் மீது நடந்த கத்தி குத்து தாக்குதலில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்சின் Cannes-ல் பொலிஸ் அதிகாரி கத்து குத்து தாக்குதலிலால் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாக்குதல்தாரி மற்றொரு பொலிசாரால் உடனடியாக சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தாக்குதல்தாரி நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதன் பின் Gonesse (Val-d’Oise) நகரில் உள்ள அவனுடைய வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அதில் தாக்குதல் நடத்தவேண்டிய மற்றும் கொல்லப்படவேண்டிய அதிகாரிகளின் பெயர் பட்டியல் Mickaël Harpon-ன் புகைப்படம் அவருடைய கம்ப்யூட்டரில் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்து USB ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பல பயங்கரவாதம் தொடர்பான வீடியோக்கள் இருந்துள்ளன.

இதைத் தொடர்ந்து அந்த நபரின் மனைவியிடம் அதிகாரிகள் சுமார் 70 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின் அவரை விடுவித்துள்ளனர். விசாரணையின் போது அவரது மனைவி, சமீப நாட்களாக தமது கணவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.

ஆனால் அது பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என தாம் எண்ணியிருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!