மக்களை வியர்க்க வைத்த வரவு செலவுத் திட்டம்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மக்களை வியர்க்க வைக்கும் வரவு செலவுத் திட்டம் எனவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின்பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு, எண்ணெய், பருப்பு, அரிசி, சீனி, மாவு போன்ற அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் வாழ்க்கைச் செலவு நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்ததாக ஹேரத் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றத்தினால் அதிகரிப்பதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்த அவர், பசில் ராஜபக்ஷ பாரிய புரட்சியை மேற்கொள்வதாகக் கூறிய போதிலும், வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!