தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளை மீள ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் தரம் 6 7. 8, மற்றும் தரம் 9 ஆகியவற்றுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!