உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கான ஆரம்கட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்ல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆய்வு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!