எரிவாயுவின் தரம் குறித்து இன்று வெளியிடப்படவுள்ள முக்கிய ஆய்வு அறிக்கை November 29, 2021 9:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் தரம் குறித்த ஆய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.அண்மைய நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.நாட்டின் ஏழு மாவட்டங்களில் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட எரிவாயுக்கள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.எரிவாயு கசிவுகள் காரணமாக இவ்வாறு கொள்கலன்கள் வெடித்ததாக குறிப்பிடப்படும் பின்னணியில் இது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டது.எரிவாயுவின் தரம் பற்றி ஆய்வு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு கொள்கலனில் உள்ளடக்கப்படும் வாயுக்கலவையின் விகிதாசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…