புதிய அடையாளத்தில் வரும் எரிவாயு சிலிண்டர் – விபரம் உள்ளே..!

நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுக்கமைய லிட்ரோ மற்றும் LAUGF ஆகிய நிறுவனங்களின் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் புதிய எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபையினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய சிலிண்டர்கள் வால்வுகளில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறை இடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை, அக்குரணை, காலி, அம்பலாந்தோட்டை, வலஸ்முல்ல மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இன்று சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!