காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம், 500ஆவது நாளை எட்டுவதை முன்னிட்டு, காணாமற்போனோரின் உறவினர்கள், இன்று நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9 மணியிளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டம் மாலை நான்கு மணி வரை நடைபெறவுள்ளது.

வுவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் 500ஆவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே, இன்று யாழ்ப்பாணத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் 108 தேங்காய் உடைக்கப்படவுள்ளதுடன், 50 தீச்சட்டிகளும் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமற் போனோரின் உறவிறனர்கள், நல்லூரில் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!