சர்வதேச நாணயநிதியம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் டொலருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!