அமைச்சர்கள் கூறினாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை! December 18, 2021 8:56 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சர்கள் வந்து வழங்க சொன்னாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வனவளாக திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் காணிகளை சுவீகரிக்கும் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சர்கள் வந்து வழங்க சொன்னாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஐந்தாறு வருடங்களாக செய்யாது இருக்கின்றார்கள்.அண்மையில் வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பிலான பிரச்சினையை தீர்க்கக்டிய வகையில் வடமாகாண ரீதியில் கூட்டத்தை ஏற்பாடு செய்து தீர்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தேன். இடம்பெயர்வுகள் கூடுதலாக இருந்தமையால், மக்கள் நீண்ட காலமாக காணிகளை பராமரிக்க முடியாது போனமையால் இங்குள்ள பிரதேசங்களில் கூடுதலாக நடைபெறுகின்றது. அதனை வெகு இலகுவாக அவர்கள் செய்கின்றார்கள். ஆனால் அதனை மாற்றியமைப்பதற்கு கஷ்டப்படுகின்றார்கள் என தெரிவித்தார்.இந்த முறை இது சரிவரும் என நம்புவதாகவும், ஏனெனில் ஜனாதிபதியினுடைய விசேட ஆலோசனைக்கு கீழாக அது விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…