முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அவமதித்த பல்கலைக்கழக மாணவர்கள்! மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தல்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அவமதிக்கும் வகையில் மாணவர்கள் நடந்துக்கொண்டனர் என சர்வமத மாநாட்டு அமைப்பின் உறுப்பினர் கலகம தம்மரங்சி தேரர் (Galagama Dammaransi Thero) தெரிவித்துள்ளார்.

அந்த பல்ககலைக்கழகத்தின் உப வேந்தரும் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துக்கொண்டதாகவும் அவர் மணவர்களின் செயலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்தார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தம்மரங்சி தேரர் இதனை கூறியுள்ளார்.

அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் வேந்தரான முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இஸ்லாம் மற்றும் சைவ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!