ரெலோவின் முயற்சியை மழுங்கடிக்கும் எண்ணம் இல்லை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து ஆவணத்தை தயாரிக்கும் வகையில் ரெலோ மேற்கொண்ட முயற்சியை மழுங்கடிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
    
எனினும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது என்பதன் அடிப்படையிலேயே குறித்த சந்திப்பு குறித்து தாம் விமர்சனங்களை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இணக்கம் வெளியிட்டதன் அடிப்படையில் குறித்த ஆவணத்தின் பொருளானது மாற்றப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!