அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உயிரை பறித்த கிறிஸ்துமஸ் மரம்!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தினத்தின் போது, வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரண்டு மகன்கள் மற்றும் அப்பா உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Pennsylvania-வில் உள்ள Bucks கவுண்ட்டியில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் 41 வயது மதிக்கத்தக்க Eric King என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.
    
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினமான நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு அவர்கள் வீட்டில் இருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் திடீரென்று தீப்பிடித்ததால், தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் வீட்டில் இருந்த Eric King-ன் மனைவி, அவருடைய தாய் மற்று மூத்த மகன் ஆகியோர் தப்பியுள்ளனர். ஆனால், வீடு முழுவதும் தீ பரவியதால், வீட்டில் சிக்கிக் கொண்ட Eric King மற்றும் அவருடைய இரண்டு மகன்களான Liam(11) மற்றும் Patrick(8) தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் இவர்களோடு சேர்ந்து வீட்டில் இருந்த இரண்டு நாய்களும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், தீயணைப்பு உதவியுடன் தீயை அணைக்க போராடியுள்ளனர்.

வீட்டில் இருந்த கிறிஸ்துமஸ் மரம் உண்மையான மரம் என்பதால், அந்த மரத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்கார மின் விளக்குகளால் ஏற்பட்ட தீ விபத்தால், மரம் முழுவதும் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுமுதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!