கனடாவில் பட்டப்பகலில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! December 30, 2021 1:14 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடாவில் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஒட்டாவாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கடந்த திங்களன்று Mooney’s Bay பூங்காவில் உள்ள மலையில் பனிச்சறுக்கில் 10 வயது சிறுமி ஈடுபட்ட நிலையில் விபத்தில் சிக்கினார். இதையடுத்து அன்றைய தினம் மதியம் 2.50 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.Mooney’s Bayவில் உள்ள மலை பூங்கா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும், அது சறுக்கு மலை அல்ல என நகரின் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பொது மேலாளர் டான் செனியர் தெரிவித்துள்ளார்.அது சறுக்கு மலையாக இருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டில், இடத்திலுள்ள ஆபத்துகள் காரணமாக அவ்வாறு தொடர அனுமதி மறுக்கப்பட்டது. சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…