அமெரிக்க வரலாற்றை மாற்றியமைத்த கருப்பின பெண்!

முதன் முறையாக அமெரிக்கா வரலாற்றிலேயே கருப்பின பெண் ஒருவர் நாணயத்தில் இடம்பிடித்த தகவல் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில், ஆரம்பத்தில் இருந்தே கருப்பினத்தவர்கள் அடிமையாக நடத்தப்பட்டதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வந்துள்ளனர். ஆனாலும், தற்போது வரை அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட கருப்பினத்தவர் மீதான நிறவெறி பாகுபாடுகள் ஆங்காங்கே நிலவி வருகிறது.
    
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தை சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர்.
இவர், கடந்த 1969-ம் ஆண்டு “கூண்டில் அடைக்க-ப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்குத் தெரியும்” என்கிற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் அவர் சிறுவயதில் இருந்து தன்மீது காட்டப்பட்ட இனவெறி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்தும் அவற்றில் இருந்து மீண்டு வந்து எழுத்துலகில் சாதனை பெண்ணாக உருவெடுத்தது எழுதியிருந்தார்.

மேலும், இந்த புத்தகத்தின் மூலம் மாயா ஏஞ்சலோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நபராக மாறினார். இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

இதனிடையே இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது 86 வயதில் காலமானார். இந்த நிலையில் மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா அரசு தற்போது வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். நாணயத்தை வெளியிட்ட அமெரிக்காவின் முதல் பெண் நிதித்துறை செயலாளரான ஜெனட் லெயனால், இதுகுறித்து அவர் கூறுகையில் “ஒவ்வொரு முறையும் நமது நாணயத்தை மறுவடிவமைப்பு செய்யும் போது, நமது நாட்டை பற்றி நாம் எதை மதிக்கிறோம்.

ஒரு சமூகமாக நாம் எப்படி முன்னேறி வருகிறோம் என்பதை பற்றி ஏதாவது சொல்ல வாய்ப்பு உள்ளது” எனத்தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!