தமிழக மீனவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல்   மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

 குறித்த வழக்கு  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடித்து  ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  

நெடுந்தீவு அருகில்  கடந்த ஆண்டு  டிசம்பர்  மாதம் 19ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.  

அத்துடன் குறித்த மீனவர்கள் பயணித்த 6 படகுகள்  கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!