சாவகச்சேரியில் ரயில் மோதி மாணவன் பலி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த உருத்திரதேவி ரயில் மோதி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
    
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த 18 வயதான உதயகுமார் பானுசன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் ரயில் பாதையைக் கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் இன்று பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்கு ஆடைகளை தைக்க சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!