அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நாங்கள் தீர்வை முன்வைப்போம்:அமைச்சர் கம்மன்பில January 29, 2022 7:56 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தவறினால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து தீர்வை முன்வைத்து அதனை மக்கள் மயப்படுத்த போவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எரிசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.நிலவும் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நெருக்கடி இருக்கின்றது என்பதை முதல் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் நீள, அகலத்தை ஆராய வேண்டும். அதன் பின்னர் அதற்கான தீர்வை தேட வேண்டும்.அப்படி முன்வைக்கப்படும் தீர்வை நடைமுறைப்படுத்தும் வரை அரசாங்கம் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வாறு முன்வைக்கும் தீர்வுக்கு அர்ப்பணிப்பை செய்யும் அதேவேளை அரசியல்வாதிகள் தமது அர்ப்பணிப்பை செயலில் காட்ட வேண்டும்.அடுத்த மாத காலத்திற்குள் இந்த செயற்பாடு நடக்க வேண்டும். இந்த யோசனையை அரசாங்கம் முன்வைக்கும். ஒரு மாதத்தில் அது நடக்கவில்லை என்றால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து முன்வைக்கும் தீர்வை மக்கள் மயப்படுத்த போவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…