மீன்பிடிப் படகு மூழ்கடிக்கப்பட்டதா? – கரை திரும்பாத மீனவர்களால் கலக்கம்!

வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவர்களோடு பலர் கடலுக்குச் சென்று திரும்பியிருந்த போதிலும் இருவர் மட்டும் நேற்றுகாலை கரை திரும்பாததால் பிரதேசத்திலுள்ள மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் தேடுதல் நடத்தியிருந்தனர்.
    
இதன்போது அவர்கள் பயன்படுத்திய வலை வெட்டப்பட்டு துண்டங்களாகக் காணப்படுகின்ற போதும் அவர்கள் சென்ற படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் பாரிய படகுகளுடன் மோதுண்டு கடலில் மூழ்கடிக்கப் பட்டிருக்கலாமென பிரதேச மீனவர்கள் அஞ்சுகின்றனர்..

யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!