பிடிபட்ட ஒரு மீனவருக்கு கொரோனா! – ஏனையவர்களுக்கு விளக்கமறியல்.

நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 21 பேர் பருத்தித்துறை மீனவர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.
    
அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அவரை இயக்கச்சியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை,ஏனைய மீனவர்களை எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!