ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் இதனை அறிவித்துள்ளனர்.
20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் கடந்த 28 ஆம் திகதி மறுத்துள்ளது.

பிணை உத்தரவை நிராகரித்த நீதிபதி, எதிர்வரும் 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றிடம் பிணை கோருமாறு ஹிஜாஸ் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் பயங்கரவாதத்தடைச சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!