அமெரிக்காவில் ஒரே இரவில் பணக்காரர் ஆன நபர்: – காத்திருந்து அடித்த ஜாக்பாட்

அமெரிக்காவில் 67 வயது நபர் ஒருவர் தனது பண பற்றாக்குறையை போக்கிகொள்வதற்காக பலமுறை லாட்டரி டிக்கெட்டை வாங்கி, அதில் இதுவரை பணம் விழாத காணத்தால் சோர்வடைந்திருந்த அவருக்கு ஒரு நாள் இரவிலேயே ஜாக்பாட் அடித்துள்ளது. Maryland மாநிலத்தை சேர்ந்து ஜான், instant tickets வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். தினமும் வாங்கி தனக்கு பணம் விழுகிறதா என ஆவலுடன் பார்ப்பார். லாட்டரி டிக்கெட்டில் பணம் விழவில்லை என்று தெரிந்தவுடன் சோகத்துடன் டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு சென்றுவிடுவார்.

நேற்றும் வழக்கம்போல “Gold” scratch-off ticket வாங்கியுள்ளார். டிக்கெட்டை வாங்கிய இவர், இதுவரை தனக்கு கிடைக்காத அதிர்ஷ்டம், இனி நமக்கு கிடைக்காது என எண்ணி, அதனை திறந்துபார்க்காமல் தான் வேலைபார்க்கும் இடத்தில் போட்டு சென்றுள்ளார். ஜானுடன் வேலைபார்க்கும் நண்பருக்கு, ஜான் ஒரு லாட்டரி டிக்கெட்டுக்கு அடிமையான நபர் என்பது தெரியும். ஜான் நிராகரித்த டிக்கெட் திறந்துபார்த்தபோது அதிர்ஷ்டவசமாக பரிசு தொகை விழுந்துள்ளது.

இதனை தனது நண்பனிடம் தெரிவித்துள்ளார்.இதனை கேட்டு ஜான் சந்தோஷத்தில் மிதந்துள்ளார். ஒரே இரவில் நமக்கும் இப்படி ஒரு ஜாக்பாட்டி அடித்துள்ளதே என சந்தோஷம் கொண்டுள்ளார். இவ்வளவு நாட்கள் காத்திருந்த அவருக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. $50,000 பரிசுத்தொகை கிடைத்துள்ளது, இதுதவிர $5,000 போனசும் கிடைத்துள்ளது. இந்த தொகையை வைத்து தனது கடனை அடைக்கவும் மற்றும் தனது வீட்டினை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக ஜான் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!