மின் விநியோக தடை ஏற்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை அனுமதி வழங்கவில்லை

மின் விநியோகத் தடையினை ஏற்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை அனுமதி வழங்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் அனுமதியின்றி மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு  மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சைக்கு தோற்றவுள்ள கல்விப் பொதுத்தராத உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டேனும் மின் விநியோகத்தினை தடையின்றி  வழங்குமாறு அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே  அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!