எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, ஒரு லீட்டர் ஓட்டோ டீசலின் விலையை 3 ரூபாவினாலும் 92 ஒக்டெய்ன் வகை பெற்றோல் லீட்டரொன்றின் விலையை 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
   
இந்நிலையில், நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 184 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் புதிய விலை 124 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!