சர்வதேச நம்பிக்கையை தகர்த்து விட்டார் பசில்!

சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது காணப்படும் சிறிதளவு நம்பிக்கையும் முழுமையாக வீழ்ச்சியடையும் வகையிலான கருத்துக்களையே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
    
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்த அவர்,

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு 7 மூளைகள் காணப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும் , மூளையில் ஒருபகுதியேனும் இல்லாததைப் போன்றே அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
வடகொரியாவிடமிருந்து ஆயுதக்கொள்வனவு தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களால் எதிர்காலத்தில் எவ்வித சர்வதேச உதவிகளும் , முதலீடுகளும் கிடைக்கப் பெறாமல் போகும்.

சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்துமளவிற்கு பாரதூரமானதொரு விடயத்தினை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேசத்தில் எந்தளவிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்துள்ளமையின் காரணமாகவே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதற்கு மறுப்பு தெரிவித்தள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!