நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை நிலவும்

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

கிழக்கு, ஊவா மற்றும்வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை  ஆகிய மாவட்டங்களின் சிலபகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை  ஆகிய மாவட்டங்களிலும்பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சப்ரகமுவ மாகாணம் உட்பட நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை  ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில்50 மில்லிமீற்றருக்கும் அதிகமான  மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் முற்பகல் வேளையில் பனிமூட்டமான வானிலை காணப்படும்என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!