ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இன, மதங்களுக்கு இடையில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!