கச்சதீவு திருவிழா – திமுக முக்கிய பிரமுகருக்கு டக்ளஸ் வாக்குறுதி! February 7, 2022 8:24 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடலை நடத்தி இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்துகொள்வதற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லை என்று ஏற்பாடு குழு தீர்மானித்திருந்தது.இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…