பொருளாதார நெருக்கடிகளுக்கு பசில் ராஜபக்ஷவே பொறுப்பு!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது பணியை பசில் செய்யத்தவறியமையே நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.
    
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டின் பொருளாதாரம் பாரதூரமான அளவுக்குப் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் அரசாங்கம் கொரோனாவே காரணம் என்கிறது அரசாங்கம். எனினும் வேறெந்த நாடுகளிலும் கொரோனாவால் பொருளாதாரம் இந்தளவுக்குப் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதையப் பொருளாதார நிலைமைகளுக்கு நிதி அமைச்சர், நிதிச் சபை, மத்திய வங்கியே பொறுப்புக்கூற வேண்டும். இவர்கள் அனைவரும் அவர்களின் பணிகளை செய்யத்தவறியமையே தற்போதைய நிலைமைக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!