நான்காவது தடுப்பூசி தொடர்பான புதிய அறிவித்தல்

வெளிநாடு செல்போருக்கு நான்காவது கொரோனா தடுப்பூசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடு செல்லும் நபர்களுக்கு அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப நான்காவது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளாா்.

அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு உயர் கால்விக்காக சென்ற மாணவர்கள் சிலருக்கு, இந்த தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சம்பந்தபட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்டுளள கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!