அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கிலிருந்து பஸில் ராஜபக்ஸ விடுவித்து விடுதலை

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ மீது கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அவர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!