ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்திக்கிறார் பேராயர்!

வத்திக்கானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்செல் பச்லட்டை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    
வத்திக்கானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பேராயர், அங்கிருந்து ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளார். இந்த நிலையில், அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க உள்ளார்.

இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலைமை உட்பட மேலும் பல விடயங்கள் குறித்து அவர், மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!