எதிர்வரும் வாரங்களில் மருந்து பொருட்களுக்கு தட்டுபாடு

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 இதன்படி,புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளின் இருப்பு குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்தநிலையில், நாட்டுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி முன்னுரிமை அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக  மருந்து ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!