ஒளடதங்களுக்கான கட்டுபாட்டு விலை நீக்கப்பட வேண்டும்

ஒளடதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கல்கந்த தெரிவித்தார்.

 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கல்கந்த இதனை தெரிவித்தார்.

 சீமெந்து பால்மா, ஆகிய பொருட்களுக்கு கட்டுபாட்டு விலையை நீக்கியதை போன்று  ஒளடதங்களுக்கு கட்டுப்பாட்டு விலையினை நீக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் ஒளடதங்களை விநியோகம் செய்யும் சில நிறுவனங்கள் தங்களது விநியோக நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொண்டுள்ளமையினால் ஒளடதங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதுமாத்திரமின்றி உயர் இரத்த அழுத்தம், நரம்பியல் கோளாறுகள், உள்ளிட்ட நோய்களுக்கான ஒளடதங்களுக்கு பாரிய தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!