ஜனாதிபதி மீது வைத்த நம்பிக்கையின் பாவத்தை அனுபவிக்கின்றோம்!

பசில் ராஜபக்சவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது எனவும் மக்கள் தற்போது புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
    
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வாக்களித்த 69 லட்சம் ம்ககளுக்கு மாத்திரமல்ல, சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மீறியுள்ளது.

அரசாங்கம் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் அதனை வெளியிட முடியும். ஜனாதிபதி தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிற்கும் பொம்மலாட்டகாரன் பசில் ராஜபக்ச.
மகிந்த ராஜபக்ச தற்போது புடலங்காய் நிலைமைக்கு சென்றுள்ளார். 20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை குறித்து கவலையில் இருக்கின்றேன். ஜனாதிபதி மீது வைத்த நம்பிக்கையின் பாவத்தை தற்போது அனுபவித்து வருகின்றோம் எனவும் விஜேதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!