சமூகவலைத்தளம் ஊடாக போதை பொருள் விருந்துபசாரங்களில் ஈடுப்பட்ட 39 பேர் விளக்கமறியலில்

சமூகவலைத்தளம் ஊடாக  போதை பொருள் விருந்துபசாரங்களில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட 39 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு வென்னப்புவ பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றிரவு  குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்  சந்தேக நபர்கள் மாராவில் நீதவான் நீதிமன்றில் இன்றுமுன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்துஎதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதிற்கிடைப்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!