இலங்கை றக்பி சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தம்….!

இலங்கை றக்பி சம்மேளனத்தின் பதிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் ஏப்ரல் முதலாம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை றக்பி சம்மேளனத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், தேர்தலை நடாத்துவதற்குமாக உரிய அதிகாரம் உடையவராக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!